♥இருந்தும் இல்லாத கண்கள்,
அசைவுகள் மறந்த கைகள்,
நகரத்தெரியாத கால்கள்,
திறக்கப்படாத இதழ்கள்
♥உயிரினங்களின் உருவம் தாங்கி
உணர்வின்றி உறைந்து கிடக்கும்
உணர்வின்றி உறைந்து கிடக்கும்
உயிரில்லா பொம்மைகள்…
♥குழந்தைகளின் விரல்கள்
தங்கள் மீது படுகிற போதெல்லாம்,
அவர்களுடன் விளையாட
சிரிப்பை சுமந்து கொண்டு
உயிர் பெற்று விடுகின்றன.
–விஜயன்
–விஜயன்